பங்காளிங்க..

Saturday, May 27, 2023

யார் அரசு ஒப்பந்ததாரர்கள் ???


 தமிழ்நாட்டில் அடுத்தடுத்து செந்தில் பாலாஜி மீதான புகார்கள் வரவும், அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய களமிறங்கினர்....! அதை செய்யவிடாமல் தடுத்து அந்த சூழலை தனக்கு சாதகமாக்கி தனக்கு தேவையான கணக்கில் வராத ஆவணங்களை மறைத்து விட்டு சுதாரித்து கொண்டது ஒரு கும்பல். 

சரி, ஊடகங்கள் இதற்கு என்ன பதிவுகளை வெளியிட்டது? அரசு ஒப்பந்ததாரர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை! 

ஒரு சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் வெளியிட்ட செய்தி என்ன? செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீட்டில் அதிரடி சோதனை?

இரண்டு செய்தியும் ஒன்றுதான்...உண்மைதான்...

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், யார் இந்த  அரசு ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்தங்கள் யாவும் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் கவனித்து கொள்ள வேண்டும், 

எப்படி கோபாலபுரத்தில் ஒரு குடும்பம் மட்டுமே தலைமுறை தலைமுறையாக சொத்துக்களை குவித்து வருகின்றதோ, அது போலவே, கரூரில் ஒரு குடும்பம் மட்டும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அல்லது அதிகாரத்துக்கு வந்தாலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி கரூரில் தனது நிலையை உறுதி செய்து வருகிறது, 

பல கிராமங்களில் இந்த வேட்டை நாய்கள் என்று வளர்ப்பார்கள், அந்த நிலையில்தான் இங்கே சில நாய்கள் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டு கத்தை, கத்தையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்திற்காக, ஆவணங்களுக்காக, சொத்துக்காக தனது விசுவாசத்தை வெறும் 200 ரூபாய்க்கும், சாராயத்திற்கும் அடகு வைத்து விட்டு தன்னை அழித்து ஏமாற்றி சம்பாதித்த பணத்தை தன்னையே காக்க வைத்து காவலாளி போல நடத்தி வருவது கூட தெரியாமல் விசுவாசத்தை காண்பிக்கும் கொடுமை வேறு எங்கும் கிடையாது, 

இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு அமைச்சரை பார்த்து பயந்து வெளிநாடு தப்பித்து செல்லும் முதல்வர்கள் என்பது உலகத்திலேயே, இந்தியாவிலேயே, தமிழ்நாட்டிலேயே திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மட்டுமே அந்த பெருமை உண்டு, 

யாரை திருடன், அயோக்கியன் ஊழல்வாதி என்று சொன்னோமோ அவரையே தனது கட்சியில் சேர்த்து கொண்ட கேவலம் திமுகவில் மட்டுமே சாத்தியமான ஒன்று....

ஆக, ஆக அரசு ஒப்பந்ததாரர்கள் அத்தனை பேருமே கரூர் கம்பெனி கபோதிகள்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது...

விரைவில் இந்த அஞ்சு கட்சி அமாவாசை ஆறாவது கட்சியின் அழைப்பிற்கு காத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.