பங்காளிங்க..

Wednesday, June 22, 2011

தினகரன் பத்திரிக்கையின் அலம்பல்ஸ்

கடந்த 15 நாட்களாக தினகரன் பத்திரிக்கையினை வாங்கி பாருங்கள்.....நாட்டில் நடக்கும் அநியாயங்களை அநியாயத்திற்கு தட்டி கேட்டிருப்பார்கள்...
 
மணல் கொள்ளை நடக்கின்றது, வீடுகளில் கொள்ளை நடக்கின்றது....
அடுத்தது சாலையில் வைத்திருந்த நிழற்குடை முறிந்து விழுந்துவிட்டது....
வரப்போகும் மின்வெட்டு பற்றிய ஒரு சர்வே, என்று தமிழ் நாட்டு அதுவும் சென்னை மக்களுக்காக தினகரன் "உண்மையாய்" செயல்படுகின்றதே....

தமிழ் நாட்டு மக்கள் மீது இவர்களுக்கு எப்படி எல்லாம் அக்கறை இருக்கின்றது?
அது சரி, "ஸ்பெக்ட்ரம்  ஊழலா?, கனிமொழி அத்தைக்கு என்னாச்சு? தாத்தா அவருக்கு அவரே கேள்வி கேட்டு பதில் சொல்வாரே, அதை எல்லாம் காணவில்லை....

ஈழத்தமிழர் சோத்துக்கு வழி இல்லாத போது இங்கே இவனுங்க மொத பக்கம் புல்லா போடுவானுன்களே ஒரு "விவல் விளம்பரம்", அது எதையுமே இப்போ காணோம்....

உன் தாத்தா ஆட்சியிலே மணல் கொள்ளைனு ஒரு படம் வர மாட்டேங்குது....
வீடுகளில் கொள்ளைனு என்னமோ இந்த அம்மா ஆட்சிக்கு வந்த மறுநாள்தான் நடக்கிற மாதிரி ஸ்டில் போடுறானுங்க....உன் தாத்தா ஆட்சியிலேதானே போலிஸ் ஸ்டேசன்லேயே கொள்ளை அடிச்சானுங்க...
இரண்டு நாளைக்கு முன்னாடி பீச் ல வச்சிருந்த நிழற்குடை முறிஞ்சி விழுந்திட்டுன்னு படம் போட்டு காம்பிச்சானுங்க....எனக்கு தெரிஞ்சு அந்த நிழற் குடை அமைச்சு கொடுத்த போது ஆட்சியிலே இருந்தவன் யாரு, அதை செஞ்சவன் மேல விசாரணை கமிசன் வைச்சா உண்மை நிலவரம் வெளியே வரும்னு நினைக்கிறேன்....

கடந்த ஆட்சியிலே ஒரு இடத்திலும் நிழற் குடையே கிடையாது....இருந்த நிழற்குடை எல்லாத்தையும் பிடுங்கி போட்டானுங்க.... அதை பற்றி எல்லாம் ஒன்னும் செய்தியே  கிடையாது....

அப்போ எல்லாம் எந்திரன் ஸ்டில்ஸ்சா போட்டு தள்ளுவானுங்க....ரஜினி இப்படி திரும்புனாறு, அப்படி தும்முனாறு....காரணம் சன் பிக்சர்ஸ் தான் சீன் காமிப்பானுங்க....


இப்போ இவனுங்க போடுற ஸ்டைல பார்த்தா யாருக்கு ஆதரவா செய்திய போடுறானுங்க நு தெரியலை....

ஒரு வேளை "சேம் சைடு கோல்சா" இருக்குமோனு லேசா டௌட் வருது.....
காரணம் ஒருவேளை அந்த கேபிள் டிவி மேட்டரா இருக்குமோ????

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...