பங்காளிங்க..

Wednesday, August 29, 2012

மகளிர் மட்டும் (13+)

இப்படி எல்லாம் எழுதுறானே, இவன் ஒரு டைப்பா இருக்கானே னு பீல் பண்ணாதீங்க..எப்போ பார்த்தாலும் அரசியல்தானா? இன்னிக்காவது எங்க நியாபகம் வந்துச்சே னு கேட்டாங்க...உண்மைதான்...

இன்று என் அம்மாவின்  பிறந்த நாள் , அவர்களின் விருப்பத்திற்காக,


பயனுள்ள குறிப்புகள். (ஏற்கனவே உங்களுக்கு தெரியும் எனில்,விட்டுத் தள்ளுங்கள்)  

*பட்டுப் புடவையில் துர்நாற்றம் வருகிறதா?

லேசான வெள்ளைத் துணியில் மிளகை வைத்து சிறு சிறு பொட்டலமாகக் கட்டி பட்டுப் புடவைகளுக்கு இடையே வையுங்கள். வாடை அறவே வராது.


*வாங்கிய தக்காளி அழுகிப் போகிறதே என்ற கவலையா?

வாங்கியதும் உப்பு நீரில் போட்டு வைத்தால் கெடாமலும் நிறம் மாறாமலும் இருக்கும்.


*சலவைக்குப் பின் துணி வெண்மையாக இருக்க வேண்டுமா?

இளம் சூடான நீரில் சோடா உப்பு பொடியைப் போட்டுத் துணிகளை ஊறவைத்து துவைக்கவும். துணிகள் "பளிச்" என்று இருக்கும்.


*பாத்திரங்கள் பளபளக்க வேண்டுமா?

தவிடு, அரப்பு, உபயோகித்த காபி பொடி ஆகியவற்றைக் கலந்து பாத்திரங்களை தேயுங்கள். முகம் பார்க்கும் அளவுக்கு அவை பளிச்சிடும்.


*பாட்டில் மூடி இறுகி திறக்கவில்லையா?

வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு திறந்து பாருங்கள் உடனே திறந்துவிடும்.


*சாம்பார் வெங்காயத்தை உரிக்கச் சிரமமாக உள்ளதா?

உரிப்பதற்கு முன் 10 நிமிடத்துக்குத் தண்ணீரில் ஊற வையுங்கள். தோல் சுலபமாக வரும்.


*அரிசி மாவு, ரவை போன்றவை சீக்கிரம் கெட்டுப் போகிறதா?

அவற்றைச் சலித்து வறுத்து வையுங்கள். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.


*சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா?

வெந்நீரைச் சேர்க்காதீர்கள். உருளைக்கிழங்கு மெலிதாக நறுக்கிப் போட்டால் உவர்ப்புத் தன்மை குறைந்து விடும்.


*சட்டைக் காலரில் உள்ள அழுக்குப் போகவில்லையா?

சிறிது ஷாம்பு எடுத்து காலர் அழுக்கில் தேய்த்து ஊறவைத்து துவைத்துப் பாருங்கள். அழுக்கு அம்பேல்.


*தயிர் புளிக்க வேண்டுமா?

அதில் தேங்காய் பத்தைகளைப் போட்டுப் பாருங்கள். சீக்கிரம் புளித்துவிடும்.


*சலவை சோப்புகளினால் ரவிக்கை நிறம் மங்குகிறதா?

குளிக்கும் சோப்பினால் துவைத்து நிழலில் உலர்த்துங்கள் நிறம் மாறாது.


*மழைச் சேறு பட்டு உடை கறையாகி விட்டதா?

உருளைக் கிழங்கை அரிந்து எடுத்து அதன் மீது தேய்த்தால் கறை காணாமல் போகும்.


கூந்தல் பற்றிய டிப்ஸ் இங்கே - வேண்டாம் எனில் தவிர்க்கவும்..

* பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.

* முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.

குட்டை முடி:

* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். * அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.

* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.

நீளமான முடி:

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.

* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

* சதுர முகம்: தளர ( காதை மூடிய பின்னல் ) , கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். * குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.

* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

* எல்லோருமே கொண்டைவலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.


இது அனைத்துமே வேறொரு இணையப் பக்கத்தில் இருந்து சுட்டதுதான்! அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

Monday, August 27, 2012

உலராதீன்க!! பதிவர் நண்பர்களே!

நம்ம பதிவுலகிலே, எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாரும் இருப்பதாக சொல்றாங்க..

எங்கே நான் கேக்குற கேள்விக்கு கரெக்டா பதில்  சொல்லுங்க  பாப்போம்?

கீழே இருக்கிற படத்துல மொத்தம் எத்தனை பேரு இருக்காங்க??

கரெக்டா சொல்லணும்...மாத்தி மாத்தி சொல்லக் கூடாது!!  நானும் பாக்குறேன், உங்க திறமைய??


Wednesday, August 22, 2012

ஒலிம்பிக்கில் சீனா அதிக பதக்கம்-எப்படி? அதிர்ச்சி பின்னணி!!!!

லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக பதக்க பட்டியலில் இடம் பெற்றது சீனா.

என்ன காரணம்? ஒரு ஆய்வு நடத்தினோம்.

அதற்க்கு எங்களுக்கு கிடைத்த பல அதிர்ச்சி தகவல்களை இங்கே புகைப்படமாக உங்களுக்கு தருகின்றோம்.


 மேற்கொண்டு நாம் என்ன செய்யலாம் என்பதை நண்பர்கள் உங்களது கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்.


































இப்போ சொல்லுங்க என்ன செய்யலாம்? நாமளா இருந்தா மனித உரிமை ஆணையத்துக்கு எப்பவோ போயிருப்போமே? பொத்தி பொத்தி வளர்த்தேனே,என் பிள்ளைய நானே அடிச்சது கிடையாதே? னு அழுது புலம்பி இருக்க மாட்டோம்? என்ன சொல்றீங்க?

Tuesday, August 14, 2012

மான் ஆடுதா? இல்லை மயில் ஆடுதா?

பெருசுங்க எல்லாம் ட்ரைனிங் கொடுத்து ஆடுறதுக்கும், இவங்க ஆடுறதுக்கும் என்னதான்யா வித்யாசம்?
 
 என் மனதை கொள்ளை அடித்த காணொளி.......இங்கே உங்கள் பார்வைக்கு....
 

இதை பார்த்த பிறகு பிறகு எனக்கு அவளை அப்படியே வாரி அணைச்சு, முத்த மழை பொழியணும் போல இருக்குங்க..அம்புட்டு அழகு...
பொறுமையா பார்த்திட்டு உங்க கருத்தை சொல்லுங்க.... 
(பைலோட மொத்த சைசு 3.40 எம்.பி தாங்க...)

 

Friday, August 10, 2012

கலைஞரைப் பற்றிய ஒரு ரகசியம்...

அந்த பெயரை உச்சரிக்கும் போதே எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்கின்றது. இத்தனை நாள் அவரை பற்றி முழுமையாக தெரியாமல் இருந்திருக்கின்றேனே!!!

யார், யாரை எல்லாமோ பற்றி கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் தமிழ் மொழிக்காக, மொழியின் உணர்வுகளுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது சொந்த வாழ்க்கையை பற்றி நமக்கென்ன? தமிழ் மொழிக்காக அவர் ஆற்றி இருக்கும் பங்கு மகத்தானது.

அவர் எவ்வளவு சம்பாதித்தார், எவ்வளவு சேர்த்து வைத்தார் என்பதெல்லாம் நமக்கு தேவை யற்றது.. நமது தமிழ் மொழியின் பண்பினையும், வெற்றியையும் உறுதி செய்ய அவரால் முடிந்திருக்கின்றதே! அதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.

இனி தமிழுக்காக பாடுபட்ட தலைவர்கள் என்ற விதத்தில் அவரே எனக்கு ஒரு முன்னோடி, முன்னுதாரணம். திராவிட என்ற சொல்லுக்கு சிறந்த மனிதர் அவராகத்தான் இருக்க முடியும் என்று சொன்னால் மிகையாகாது.

அவர் எத்தனையோ நூல்களை எழுதி இருக்கின்றார். தமக்கு தாமே வெகு இலகுவான  கேள்விகளை கேட்டுக் கொண்டு அதற்க்கு பதில் சொல்லும் சராசரி மனிதர்!!!! கிடையாது அவர்.

நான் சொல்றது எல்லாமே பரிதிமார் கலைஞரை பற்றித் தானே தவிர வேறு எவரும் கிடையாது.

  • ரூபவதி
  • கலாவதி
  • மான விஜயம்
  • தனிப்பாசுரத் தொகை
  • பாவலர் விருந்து
  • மதிவாணன்
  • நாடகவியல்
  • தமிழ் விசயங்கள்
  • தமிழ் மொழியின் வரலாறு.
  • சித்திரக்கவி விளக்கம்
பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898) 2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898) 3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899) 4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901) 5.தனிப்பாசுரத்தொகை (1901) 

அவ்வளவு பெரிய மனிதரின் ஆயுட்காலம் மிக குறுகிய காலத்தில் முடிந்ததுதான் வேதனைக்குரிய விசயமாக இருக்கின்றது. 

உண்மைதான் நல்லவர்களைத் தான் ஆண்டவன் வெகு விரைவினில் அழைத்து கொள்வான். அவரது இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி...ஆனால் தமிழின் மீதுள்ள பற்றினால் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றி அமைத்துக் கொண்டார்.

அவரது மறைவிற்கு அவரது பேராசிரியர் மில்லர் என்பவர்  
என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.
ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே. என்று வேதனையோடு அழுது இருக்கின்றார். 

அவருடைய பெருமையானது அவரது புகைப்படமே தபால்தலையாக வந்திருப்பதுதான்..இதைவிட நமக்கு வேறு என்ன பெருமை கிடைத்து விடும். ஆனால் தற்போது ???? எல்லாமே விளம்பரத்திற்கும், அரசியல் சுயலாபத்திர்க்கும் மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப் படுகின்றது என்பதை நினைத்தால் வெட்கி தலை குனிய வேண்டி இருக்கின்றது.

Tuesday, August 7, 2012