பங்காளிங்க..

Friday, November 16, 2012

பசங்க, பொண்ணுங்க! உடம்பை பத்தி தெரிஞ்சிக்கோங்க!!

நிச்சயம் இது ஆபாசம் கிடையாது. நம்ம உடம்பை பத்தி நாம தெரிஞ்சுக்கிரதுல தப்பே கிடையாது. இதுல கூச்சப்பட எதுவுமே கிடையாது. எல்லோரும் இதை தெரிந்திருந்தால் நல்லது என்று நினைக்கின்றேன். 

இப்போ தெரிஞ்சிக்காம எப்போதான் அவங்க தெரிஞ்சிக்கிறது...உங்க பள்ளிக்கூடம் போற பிள்ளைங்களுக்கு இதைச் சொல்லிகொடுங்க..
எல்லாரும் சொல்றாங்க, நானும் சொல்றேன்..எல்லாரும் பேசுறாங்க, நானும் பேசுறேன் என்று இருப்பதை விட ஏன், எப்படி என்று சேர்த்து தெரிந்தால் உத்தமம்.
 
 


அதற்குத்தான் இந்த குறிப்புகள்..

மேலே, கீழே!


நீங்கள் தலைகீழாக அதாவது தரையில் தலை இருப்பது போல் இருந்து உணவு உட்கொண்டாலும் அது வயிற்றுக்குள் சென்று சரியாக சேரும் என்கின்றது ஆய்வு.  

கனவு காணவேண்டுமா?

நம்மில் 85 சதவிகிதம் பேர் மட்டுமே கலரில் கனவு காண்கின்றோம்..மற்றவர்கள் எல்லோரும் பிளாக் அன்ட் வொயிட் டுதானாம். நம்ப முடியவில்லையே..!!!

ரொம்ப ஸ்ட்ராங் பாடியா?

நம்ம உடம்புலேயே மிகவும் பலம் வாய்ந்த பகுதி எது தெரியுமா? எனாமல் என்று சொல்லப் படும் நமது பற்கள்தான்....

குழந்தை!

பொதுவாக குழந்தைகள் வசந்த காலத்தில்தான் உடளவில் வளர்ச்சி எற்படுகின்றதாம். எவ்வளவுதான் 'பிளான்' குடிச்சாலும் அவன் அல்லது வசந்த காலத்தில்தான் வளர்ச்சி இருக்குமாம்..


சாவு!!


ஒருவன் இயற்கையாய் சாகும்போது முதலில் சாவது அவன(ள )து கண்கள், கடைசியில் போவதுதான் அவன(ள )து கேட்கும் சக்தியாம்.


1900 வருடங்களில் யு எஸ் சில் ஒருவரது ஆயுட்காலம் அதிகப்படியாக 47 ஆக இருந்ததாக வரலாறு சொல்கின்றது.


இறப்பிற்கு அடுத்த நொடி தலைமுடி மற்றும் நகங்களின் வளர்ச்சி நின்று போய்  விடுமாம்.


செத்த பிறகு உடல் அறுவை நடக்கும் இடத்தினில் முதலில் தலையில் இருந்து கால் வரை அறுவை செய்வார்கள், பின்னர் காலில் தொடங்கி தலையில் முடித்து விடுவார்கள்.


துப்பாக்கி மற்றும் ஆயுதங்களில் சாகும் மனிதர்களை விட ஐந்து மடங்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்தவர்கள் அதிகம் என்கின்றது ஆய்வு.


உங்களை காற்று நுழையாத இடத்தினில் அடைத்து வைத்தால் நீங்கள் கார்பன்டை ஆக்சைட் விசத் தன்மையால்  இறப்பீர்கள்..ஆனால் அதற்க்கு முன்னரே ஆக்சிஜன் பற்றாக்குறையால் செயலிழந்து போவீர்கள்.



டிரக்ஸ்


ஆஸ்பிரின் என்ற மருந்து மட்டுமே முதலில் மாத்திரை வடிவினில் உருவானதாக தகவல்கள் சொல்கின்றது.



கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்..


கண்ணுக்குள்ளே இருக்கிற கறுப்பு  பந்துதான் ஆச்சரியம், அதிர்ச்சி, எரிச்சல் எதுவானாலும் சுருங்கி விரிகின்றது...


நாம் கண்ணால் பார்ப்பது கிடையாது...மூளையால் மட்டுமே பார்க்கின்றோம்..கண்கள் மூளையின் கேமிராக்கள் என்று சொல்லப்படுகின்றது.


கண்ணுக்கு வெளியே இருக்கும் முடிகள் அனைத்தும் 3 இல் இருந்து 5 மாதங்களில் 200 முடிகள் உதிர்ந்து வளர்கின்றது.


என்ன? பசங்க, பொண்ணுங்க உங்க உடலைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிருப்பீங்கனு நினைக்கிறேன்...நன்றி!!!

2 comments:

  1. useful information. congrats minsaram. nice presentation

    ReplyDelete
  2. Your title made me little nervous, now iam alrite. Shyam, Bangalore.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...