பங்காளிங்க..

Thursday, January 24, 2013

கற்பழிச்சா பாதுகாப்பு? இது எந்த நாட்டில்??

ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி அவளது விருப்பமில்லாமல் கற்பழித்தால் என்ன தண்டனை என்று உலகமே சட்ட ரீதியான நடவடிக்கைகளில் கடுமையாக இருக்கின்றது. ஆனால் பெண்ணை தெய்வமாக போற்றும் இந்தியாவில்????

இன்னமும் கட்டபஞ்சாயத்து தான் நடந்துக்  கொண்டிருக்கின்றது. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டா என்று நிரூபிக்கப் பட்ட பிறகும் தீர்ப்புகள் காலம் தாழ்த்தி வழங்கப் படுகின்றது. எதற்கு??? அடுத்த குற்றம் எப்போது என்று காத்திருக்கவா?

நாம் மென்மையாய் கருதும் அனைத்திற்குமே பெண்களை ஒப்பிட்டுக் கொள்கின்றோம். ஆனால் அந்த மென்மைக்கு மேன்மை சேர்ப்பதில் மட்டும் வேறுபட்டு நிற்கின்றோம். இன்னமும் அனைத்து ஊடகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு விமர்சனம் மட்டுமே செய்துகொண்டு வருகின்றது. இன்னமும் பல கட்சிகள் கற்பழிப்பு சம்பவத்திற்கு என்ன தண்டனை என்று வாய் திறக்கவில்லை. 

ஆனால் பல நாடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு தண்டனைகள் மிகக் கொடுமையானதாய் இருக்கும்போது இந்தியாவில் மட்டும்?????

வித்யாசத்தை பாருங்கள்...

யுஏஇ  - ஏழு நாட்களுக்குள் தூக்கில் தொங்கவைத்து மரணதண்டனை...
ஈரான் - 24 மணிநேரத்திற்கு கற்களால் தாக்கி பொது இடத்தினில் தூக்குத் தண்டனை...
ஆப்கானிஸ்தான் - பொது இடத்தினில் தூக்கிலிட்டு தலையில் குண்டு வைத்து சுட்டுத் தள்ளப்படுவார்கள்..
சீனா - நீதி விசாரணை நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை...
மலேசியா - மரணதண்டனை....
மங்கோலியா - மரணதண்டனை பாதிக்கப்பட்டவர்களின் மூலமாகவே!! 
ஈராக் - கடைசி மூச்சு வரை கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள்.
தாலிபான் - ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எடுத்து, கல்லால் அடித்தும் கடைசியில் துப்பாகியால் சுட்டும் கொல்லப் படுவார்கள்.
இந்தியா -  ????????????????????????????????????????????????

தினமும் 4 நேரமும் அரசு செலவில் சாப்பாடு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு...இப்படி 7இல் இருந்து 14 வருஷம் வரைக்கும்...வேடிக்கையாக இருக்கிறதா? ஆனால்  வேடிக்கையில் ஒரு வேதனையான செய்தி இதுவே ஆகும்....

கற்பழித்த காமுகனுக்கு, குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை என்றதும் எங்கிருந்துதான் வருவாங்கன்னே தெரியாது...இந்த மனித உரிமை பாதுகாப்புக் காவலர்கள்...!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...