பங்காளிங்க..

Monday, April 1, 2013

தமிழக காங்கிரஸ் கூண்டோடு டிஸ்மிஸ்.....பரபரப்பு செய்தி!!!

இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை.
இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ்,  மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று சுவரொட்டி அடித்ததை என்ன வென்று சொல்வது??.....இதை விட வெட்ககேடான விஷயம் காங்கிரசிற்கு இருக்க முடியாது..

மாணவர்கள் தமிழீழம் என்ற பிரச்சினைக்கு மட்டும் போராடக் கூடாது...காங்கிரஸ் என்ற கட்சியை எப்படி வேரறுப்பது என்ற கோணத்திலும் போராட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்.


இப்போதும் கூட தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வடஇந்திய மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. கேரளா, கருநாடக, ஆந்திர  மாணவர்கள் பங்குபெறவில்லை.


மாணவர்கள் அவர்களாகவே முன்வந்து  போராட்டத்தில் குதித்து உள்ளார்கள். அதை கொச்சைப் படுத்துவதற்காக சில கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வீதியில் களமிறங்கி இருக்கின்றது. உண்மையில் சொல்லப் போனால் தமிழ் நாட்டில் பல பத்திரிகைகள் அமோக வசூலை தொட்டிருக்கின்றன என்பது கண்கூடாகவே தெரிகின்றது. பெரும்பாலும் பத்திர்க்கைகள் வியாபார நோக்கினில் மட்டுமே செய்திகளை வெளியிடுவது அப்பட்டமாகத் தெரிகின்றது. உணர்வுப்பூர்வமாய் யாரும் செய்திகள் வெளியிடவில்லை அப்படி பத்திரிகை, மாணவர்கள், மற்றும் அனைத்து துறையினரும் சேர்ந்து  போராடினால்தான் இந்த போராட்டம் வெற்றி பெறும்.


இந்த போராட்டத்தில் யாருக்கு தகுதி கிடையாது..

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு சுத்தமாக தகுதியே கிடையாது என்பது பரவலாக பேசப் படும் செய்தி.   அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஆரம்பத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் சொன்னதும் இந்த செயலலிதாதான்...ஆனால் அதே செயலலிதா இன்று ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது அரசியல் நாடகமோ அல்லது நிசமோ??? ஆனால் அந்த நாடகத்தை கூட நடத்த வக்கில்லாமல் உதவி செய்வது போல் நம்பவைத்து கழுத்தருத்தது யார்? ஒரு கட்டத்தில் குடும்ப மானமா? கட்சி மானமா? என்ற கேள்வி வந்த போது என்ன செய்தது திமுக என்பது உலகறிந்த விசயமே? இப்போது கூட ஜெனீவாவில்  நடந்த தீர்மானத்திற்கு இந்திய தெரிவித்த விருப்பமில்லா ஆதரவு கூட மாணவர்கள் போராட்டத்தின் வெளிப்பாடுதானே தவிர கலைஞர் நடத்திய டெசோ காமெடி மாநாட்டிற்கு அல்ல...என்பதை மாணவர்கள் நன்கறிவார்கள். அவர் என்னமோ நான் டெசோ மாநாடு நடத்தினதாலே தான் இந்த ஆதரவு என்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.


இன்னமும் டி.ஆர் பாலு எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்? ராஜினாமா செய்துவிட்டாரா என்று தெரியவில்லை...அழகிரி தனியாக சென்று ராஜினாமா செய்கின்றார். அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம், தலைவர் வழக்கம் போல ராஜினாமா என்று சொல்வார், ஆனால் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல் ஒரு பரிதவிப்பு.

இன்று ஈழத்தமிழம் மலர வேண்டுமெனில் அதற்க்கு முதலில் ராஜபக்சேவிற்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்...மத்தியில் ஒரு கூமுட்டை அரசியல்வாதி விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று இலங்கைக்கு வக்காலத்து வாங்கி  அவர்கள் ஏன் பாகிஸ்தான் இந்திய மண்ணில் விளையாட அனுமதிக்க வில்லை???


தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும், போராடும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும்...மாணவர்களே....உங்கள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சில சாதித் தலைவர்கள் வருவார்கள்...உங்கள் எதிர்காலத்தில் அக்கறை உள்ளவர்கள் போல, உங்கள் கல்வியில் அக்கறை உள்ளவர்கள் போல நடிப்பார்கள். நாம் அறவழிப் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றோம். அது தொடர வேண்டும். எந்த நாய் வந்து தடுத்தாலும் உங்கள் முயற்சியில் இருந்து பின் வாங்காதீர்கள்.. நீங்கள் சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றீர்கள். நமது மீனவ சகோதரர்களை காப்பாற்றுவோம்...குறைந்தது உங்கள் போராட்டம் அங்கே முள்வேலிக்குள் இருக்கும் நமது சகோதர, சகோதரிகளுக்கு ஆறுதலாய் இருக்கும்...எல்லா மாணவர்களும் சானல் 4 வெளியிட்ட வீடியோ காட்சிகளை சுவரொட்டிகளாக எடுத்து ஓட்டுவோம். சினிமா சுவரொட்டிகளோ, ஐபிஎல் சுவரொட்டிகளை புறந்தள்ளுவோம்...ஈழத் தமிழச்சி மார்பு அறுந்து துடித்த காட்சிகளை கண்களுக்குள் கொண்டு வாருங்கள்...காங்கிரசை நிரந்தரமாய் அழிப்போம்...காங்கிரசிற்கு துணை போய் தமிழகத்தை அசிங்கப்படுத்திய, ஈழத் தமிழனை நம்பவைத்து ஏமாற்றிய திமுகவிர்ற்கு பாடம் புகட்டுவோம்..


உங்களுக்குள்  சாதி வெறியினை தூண்டுவார்கள், பணக்கார கல்லூரி, ஏழை கல்லூரி என்று பிரித்து பார்ப்பார்கள்...உங்களுக்குள் திடீரென அவதாரமெடுக்கும் மனிதர்களை கண்காணியுங்கள்...நிச்சயம் மத்தியில் இருந்து வெளியே வந்திருக்கும் திமுக போன்ற கட்சிகள் உங்களோடு கலந்து வன்முறையை தூண்டுவார்கள். உங்கள் போராட்டம் இதுவரை உலகமக்களை திரும்பி பார்க்க செய்திருக்கின்றது. மாணவர் சக்தி மகத்தான சக்தி...

3 comments:

  1. அப்படியே ஈழத்தாயுக்கும் எதாவது ஐடியா சொல்லி ஈழம் கிடைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்.தேவையில்லாமல் கலைஞரோ மற்றவர்களோ ஏதாவது செய்யும் முன்னே

    ReplyDelete
  2. ela viduthalai ondre theervu.polithanama vedam podum arasiyalvthikalukku manavarkal nalla padam katru koduthullargal.manava sakthi enum mulumayaga porada vendum.elam malarum varai oyamal poraduvom.nam ratha banthangalukku ethai kuda seyavillai endral nam tamilana? unarvugalai ottrumaiyudan unarthuvom.ena thuroki kangrass i veraruthu virattuvom entru ovovuvarum uruthi aarpom

    ReplyDelete
    Replies
    1. meendum elam mlarum nambikayodu poraduvom

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...