பங்காளிங்க..

Thursday, November 14, 2013

விளங்காத "கை"யை வெட்டி எறிங்க!?!

காமன்வெல்த் மாநாட்டுல இந்திய கலந்துக்க கூடாதுனு சொன்னதும்....நம்ம பாரத பிரதமரு புத்திசாலி தனமா நான் போகலை, ஆனா இந்திய அரசு சார்பா சல்மான் குர்ஷித் போவாரு னு சொல்லி அனுப்பி வைக்கிறாரு....

அப்படீனா சல்மான் குர்ஷித் இந்திய நாட்டை சார்ந்தவறு கிடையாதா? யாரை கேனையனாக்குறாங்க னு தெரியலை????

இந்தியாவுலே இருந்து ஒருத்தனும் கலந்துக்க கூடாதுனு பேசிகிட்டு இருக்கும்போது இந்தியாவிலே இருந்து சல்மான் குர்ஷித் போவாராம்...நாம பேப்பரை படிச்சிகிட்டு பேசாம இருக்கணும்...

நம்ம தமிழ்நாட்டு காங்கிரஸ் காரங்க இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க....இன்னமும் இந்த கட்சி தமிழ்நாட்டுல இருக்குது பாருங்க, அதை சொல்லணும்....தமிழ் நாட்டு மக்களுக்கு இவனுங்க எந்த அளவுக்கு விசுவாசம இருக்கானுங்க னு வேடிக்கையாத் தான் இருக்கு...

தமிழக காங்கிரஸ் மந்திரிகளே, அமைச்சர்களே, எம்பிக்களே, வார்டு கவுன்சிலர்களே ...கொஞ்சம் கூட வெக்கம், மானம் சூடு இல்லாம தமிழ் நாட்டுல இருக்கீங்களே...அதை நினைச்சாத்தான் ஆச்சரியமா இருக்கு.....நம்ம மீனவனை சிங்கள ராணுவம் இன்னிக்கு காலை வரைக்கும் அடிச்சி, சித்திரவதை செஞ்சு அனுப்பிக் கிட்டுதானே இருக்கு, அந்த விஷயம் தெரியுமா? தெரியாதா? என்னாத்துக்கு நம்ம பிரதமரு ராஜபக்சேவுக்கு பயப்படுறாரு னு சந்தேகமாவே இருக்கு? இல்லைனா இவ்வளவு பெரிய நாட்டோட பிரதமரு....குட்டியோண்டு நாட்டு அதிபருக்கு பயப்படுவாரா? என்னமோ ஒரு வில்லங்கம் இருக்கு? ஒட்டுமொத்த காங்கிரஸ் காரனும் ராஜபக்சேவிற்கு பயப்படுதான்களே....அவனை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்கிறாங்களே? தமிழ் ஈழ மக்களை நீ காப்பாற்ற மாட்டாய் என்று நன்றாகவே தெரிந்து விட்டது....

கடந்த வாரம் நம்ம ஞானதேசிகன் அய்யா ஒரு வார்த்தை சொன்னாரு....மீதம் இருக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றவே இந்தியா காமன்வெல்த் மாநாட்டுல கலந்துக்குமாம்....

ஈழத்தை விடுங்க...நம்ம ஊரு மீனவத் தமிழனை நாசமாக்கித்தானே அனுப்புது....அதுகூட உங்களுக்கு செய்தியா வரலையா!!!

முதல்ல இது அவங்க நாட்டு பிரச்சினைன்னு சொன்னீங்க...அப்புறம் ஏற்கனவே செத்து போனவனை விடுங்க...இனிமே இருக்கிறவனை சாகாமா காப்பத்துறோம்...அதுனாலதான் நாங்க சிங்களம் போறோம்னு சொல்றீங்க! எதுதான் உண்மை.???
"கை"யை "கை"யை காட்டி ஒட்டு வாங்குறீங்களே....அந்த கையை நம்பி ஈழத்து தமிழனும் இந்திய மீனவனும் (சாரி, சாரி) இந்திய மீனவன் சொன்னா உங்களுக்கு புரியாது...தமிழக மீனவனும் செத்துக்கிட்டு இருக்கானே....

ஒட்டு வாங்குறப்ப மட்டும் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியுது..ஒட்டு வாங்குன பிறகு இப்போ தென்னிந்தியாவே கண்ணுக்கு தெரியலையே...என்ன செய்யுறது....

தமிழக மக்களே "கை" நல்லா இருந்தா பயன்படுத்தலாம்....விளங்காம போன கையை வைச்சு ஒன்னும் செய்ய முடியாது....சீக்கிரம் அதை வெட்டி எறிஞ்சிட்டு  போவோம்....விளங்காத கை நம்ம உடம்புல இருந்தா என்ன? இல்லைனா என்ன? என்ன சொல்றீங்க! 

அடுத்த தேர்தல்ல அந்த "கை"யை எவனெல்லாம் "கை" பிடிக்கிறானோ அவனை எல்லாம் "கை" கழுவிடுங்க , நாம சீரும் சிறப்பும வாழ, நமது ஈழத்து உறவுகளும் நல்லா இருக்கும்.....போதுமய்யா ஏற்கனவே அவர்கள் பட்ட வேதனைகள்.! 
தயவு செய்து அந்த சானல் 4 காணொளியை எல்லாம் தடை பண்ணுங்க! எனது உறவுகள் சித்திரவதைப் பட்டு சாவதை இனியும் எங்களால் பார்க்க முடியவில்லை....உதவி செய்ய முடியாத தமிழர் உறவுகளாய் நாம்......

உதவிக் கரம் நீட்டிய நம் ஈழத்து சகோதர சகோதரிக்கு உதவ முடியாத உதவ விடாத வக்கற்ற நமது "கை"யாலாகத தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.!  இவர்களை வைத்து இந்தக் கையை வைத்து கொண்டு நாம் என்ன செய்யப் போகின்றோம்?