பங்காளிங்க..

Saturday, February 22, 2014

அம்மா ஒகே! அய்யாவுக்கு வசதி எப்படி?

23 ஆண்டு கால சிறை வாழ்க்கைக்கு பிறகு தூக்கு மேடையின் அருகே வரை சென்றவர்களை தேர்தலில் கிடைக்கும் ஒட்டு பிச்சைக்காக இத்தனை காலம் சிறையினில் வைத்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்களின் அனுதாப ஓட்டிற்காக  காத்திருந்து தூக்குத் தண்டனையை ரத்து செய்திருக்கின்றார்கள்.... இப்படி செய்தால் நாம் ஆளும்கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றுவிடலாம் என்று தப்புக் கணக்கும் போட்டு விட்டது காங்கிரஸ்...அந்த தலைமைக்கு எந்த முட்டா பயலோ தவறான தகவலை கொடுத்து விட்டான்...உண்மையில் 23 ஆண்டு காலம் சிறை வாசம் அனுபவித்த அவர்களுக்காக எத்தனை எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள்...வைகோ, பழ நெடுமாறன், செங்கொடி என்று அடுக்கி கொண்டே செல்லலாம்....

நாற்பதும் நமதே என்று சொல்லிக் கொண்டிருந்த அம்மாவை விட அதிக வாக்குகள் பெற்றிட வேண்டும் என்ற தப்புக் கணக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அந்த மூவரின் பெற்றோருக்கு நிம்மதியை கொடுத்தது....இருந்தாலும் இது மிக காலம் கடந்த சுயநலமாய் எடுத்த முடிவுதான் என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்....

இத்தனை ஆண்டுகளாய் கருணை மனுவை பரிசீலிக்காத காங்கிரசிற்கு திடீரென்று இந்த மூவரின் அவலக் குரல் கேட்டு விட்டதாம்....ஆச்சரியமாக இருக்கிறதே! இது தேர்தலுக்காக அவர்கள் எடுத்த தப்பான ஆயுதம்...இதன் மூலம் இந்த அம்மாவை காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று முடிவெடுத்த அதே நேரத்தில்...தமிழக முதலமைச்சர் அடுத்த காயை நகர்த்தினார்.....அதாவது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்திரவிடுவதாகவும் அறிக்கை வாசிக்கப் பட்டது....

மத்திய அரசு தனது உரிமையை பயன்படுத்தி தூக்குத் தண்டனையை ரத்து செய்த அதே நேரத்தில்...மாநில அரசு தனது அதிகார வரம்புக்குள் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது....

இப்போது காங்கிரசிற்கு பெரிய நெருக்கடி..எதிர்கட்சிகள் அவர்களை உசுபேத்த மீண்டும் ராகுல் காந்தி பிரதமருக்கே பாதுக்காப்பு இல்லை என்றால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்...உண்மைதான்., ஆனால் இந்த ஞானோதயம் திடிரென்று எப்படி வந்தது? 

உடனே கலைஞரிடம் பத்திர்ககையாளர்கள் கேட்டதற்கு நளினியை பரோலில் விடக் கூடாது என்று சொன்னவர் இதே செயலலிதா தான் என்றும் நாங்கள் டெசோ மாநாட்டில் எடுத்த தீர்மானத்திற்கு பயந்து போய் காங்கிரஸ் தூக்குத் தண்டனையை ரத்து செய்ததாக அவரும் சொல்லிக் கொள்கின்றார்...

ஆனால் உண்மையில் மனசார அவர்கள் வெளியே வர வேண்டும் என்று போராடியவர்கள் வெற்றியை கொண்டாடி விட்டு பேசாமல் அமர்ந்து ..கொண்டார்கள்.பெரிய கட்சிகள்தான் இன்று தன்னால்தான் தூக்குத் தண்டனை ரத்து ஆனதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றது....

அம்மா பதவியை பயன்படுத்தி அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள்...அய்யா கூட்டணியிலே இருந்த போதும் செய்யலை...நா அப்போ செஞ்சேன் என்று சொன்னாரே தவிர வேற எதுவும் செய்யலை...மிஞ்சி போனா பத்திர்க்கையை கூப்பிட்டு பேட்டி  மட்டும் கொடுத்துகிட்டு இருகாரு....

இப்போ காங்கிரஸ், அம்மா செஞ்சது தப்பு னு சொல்லுது...நம்ம அய்யா இப்போ இதுக்கு எந்த வருசத்து செய்தியை சொல்லப் போறாரோ??


**நன்றி : படம் மைசே.இன் 

Monday, February 17, 2014

இந்திய ரகசியங்கள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கு!!!


தலையங்கம் அதிர்ச்சியை தருகின்றதா?  விசயமும் அப்படித்தான்....இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியேறினால் அது ஆபத்து...அதைப் போலவே இந்தியாவை சார்ந்த்த எந்த ஒரு விசயமும் வெளி நாட்டவர்க்கு தெரிந்தால் அதனால் நமக்கு பாதகம் என்றால் இதுவும் ஒரு வியாபாரமே...

அப்படி என்ன வியாபாரம் என்று யோசிக்கின்றீர்களா? விளையாட்டு த் துறையினில் தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன? 

இந்தியாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டி கொடுப்பதில் முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட் விளையாட்டுதான்...

ஆறிலிருந்து தொண்ணூறு வரை கிரிக்கெட் விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கின்றது...

விளையாட்டினில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது உண்மையே...ஆனால் இந்தியாவின் வெற்றி ரகசியம் விற்கப்பட்டு தோற்கப்படும் போது அது வியாபார மாகின்றது.

எங்கே துவங்குகின்றது வியாபாரம்...ஐபிஎல் போட்டியில் தொடங்குகின்றது வியாபாரம் மற்றும் சூதாட்டம்...சூதாட்டம் எல்லாம் சாதாரணத் தொகையில் அல்ல...கோடியினில் தான் புரளுகின்றது...

இந்தியாவில் உள்ள வணிக ஜாம்பவான்கள் எல்லோரும் இந்திய ரகசியங்களை போட்டி போட்டு விற்கத் தொடங்குகின்றார்கள்...

வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்கின்றார்கள்...ஆனால் இந்திய வீரர்கள் அதிக அளவினில் இதில் பங்கு பெறுகின்றார்கள்...

சர்வதேச விளையாட்டினில் கூட இந்த அளவிற்கு உழைக்க மாட்டார்கள்...ஐபிஎல் போட்டி ஒவ்வொன்றிலும் அதிகமாய் உழைக்கின்றார்கள்...

என்ன பிரச்சினை எனில்...இந்தியாவின் ஆடுகளங்கள் எல்லா நாட்டு அணியினருக்கும் மிகவும் பழகி விடுகின்றது....இந்த ஐபிஎல் போட்டிகளை அவர்கள் பயன்படுத்தி இந்திய ஆடுகளங்கள் மற்றும் இந்திய வீரர்களின் ஆட்டத் திறமைகளை நன்கு கற்றுக் கொள்கின்றார்கள்...

அடுத்த முறை சர்வதேச போட்டியில் எளிதாக இந்திய வீரர்களை பந்தாடுகின்றார்கள் ....விளைவு எளிதாக ஜெயிக்க கூடிய போட்டியிலும் தோல்வியை சந்தித்து வருகின்றார்கள்....

இப்படி கூவி கூவி இந்திய ரகசியங்களை விற்கும் கும்பலை நாம் என்னவென்று சொல்வது???

விளையாட்டினில் வெற்றி தோல்வி சகஜம்...தோல்வி ஏற்படும்போது விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்பவர்கள் ஒரு பக்கம் சிந்திக்க வேண்டும்....வெற்றி பெறும்போது நீங்கள் விளம்பரங்களை வாங்கிக் குவிக்கின்ரீர்கல்...அதுவே தோல்வியின் போது ரசிகர்களின் கண்டனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே...அதை மட்டும் ஏன் கூடாது என்று தப்பிக்க முயற்சி செய்கின்றீர்கள்...

இந்த ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு வீரரும் கோடி ரூபாயில் ஏலத்தில் எடுக்கப் படுகின்றார்கள்...அந்த பணத்தினில் ஏன் லட்சக் கணக்கான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யக் கூடாது.!!!

அதில் ஏன் அக்கறை காட்ட மறுக்கின்றார்கள்...இன்றும் நமது கிராமங்களில் அதிவேக பவுலர்களும், அதிரடி பேட்ஸ்மேன் களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சரியான வழிகாட்டி இல்லாமல் , கல்வி இல்லாமல், மொழி தெரியாமல் அவர்கள் தவித்து கொண்டுதான் இருக்கின்றார்கள்...அவர்களின் திறமையை ஊக்குவிக்கலாமே....

இப்படி இந்திய ரகசியங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதில் இந்தியாவிற்கு அழிவைத்தான் தேடித் தரும்.....

Wednesday, February 12, 2014

"அமெரிக்காவுக்கு ஆப்பு இலங்கைக்கு கப்"

இந்தியாவை ஆளும் காங்கிரசின் போக்கு விநோதமாகவே இருக்கின்றது. குறிப்பாய் தமிழனை தொடர்ந்து வஞ்சித்து வருவதும் வேதனையான விசயமே...

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததை கண்டு உடனடியாக இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்தியா. மிகவும் துணிச்சலான செயல்தான்...

இதைப் பாராட்டுவதா என்று கேட்டால் நிச்சயம் பாராட்டக் கூடாது...அமெரிக்காவுக்கென்று சில சட்ட விதிமுறைகள் உள்ளது. அந்த சட்ட விதிமுறைகளை மீறியதால் தேவயாணி மீது நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்கா கூறியுள்ளது...

அதனை ஏற்க மறுத்த மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரை வெளியேற உத்தரவிட்டது...

அதே சமயத்தில் இந்திய வம்சாவளியை சார்ந்த வழக்கறிஞர் தேவயாணி மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை சரியானது என்று சொல்லி இருக்கின்றார்...

எது உண்மை? இன்னமும் புலப்படவில்லை...

தேவயானியின் ஆடையை களைந்து நிர்வாண சோதனை செய்ததாக அமெரிக்கா மீது தொடர்ந்து குற்றம் சாட்டியது இந்தியா...ஆனால் அமெரிக்கா இதனை மறுத்து வருகின்றது....

இது அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினை என்று சொன்னதற்காக இந்தியா பேசாமல் விட்டு விட்டதா? இல்லையே...அமெரிக்காவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதே....

ஆனால் அதே சமயத்தில் நமது ஈழத்து உறவுகள் பெண்கள் எத்தனை எத்தனை ஆயிரம், லட்சம் பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இந்தியாவின் உதவிக்காக, கருணைப் பார்வைக்காக காத்திருந்தனர்....

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத இந்தியா, நியாயம் கேட்டால் அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினை, அதில் தலையிட முடியாது என்று கைவிரித்து போனதே! இதை விட வெட்க கேடான விஷயம் ஏதும் இருக்க முடியுமா? 

இலங்கையில் நமது உறவுகளை கொத்துக் கொத்தாய் கொன்று  குவித்த போது உள்நாட்டு பிரச்சினை என்று சொன்ன அதே காங்கிரஸ் அமேரிக்காவின் உள்நாட்டு பிரச்சினையில் எப்படி மூக்கை நுழைத்தது? 

அதுவும் தெருவில் சும்மா போன பெண்ணை கைது செய்யவில்லை, விசாரணை செய்யவில்லை....தேவயானியின் வேலைக்காரப் பெண் கொடுத்த புகாரின் பெயரிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக அங்கிருக்கும் ஏடுகள் தெரிவிக்கின்றது....

ஆனால் தெருவில் சும்மா போன, பெண்கள், பச்சிளங்குழந்தைகள் எல்லாம் பாலியல் வன்புணர்வு கொண்டு கொன்று குவித்த இலங்கைக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்த கொடுமை எந்த நாட்டிலாவது நடக்குமா? 

இவ்வளவு ஏன், நமது தமிழக மீனவர்கள் கிட்டத்தட்ட 400 பெயரை இலங்கை கடற்படையினர் கொன்று கடலில் வீசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை....

இலங்கையை கண்டாலே காங்கிரஸ் பயப்படுகின்றது என்றே சொல்லும் அளவிற்கு நடந்து கொள்கின்றது....மீனவர்களின் நலனுக்காக காங்கிரஸ் பாடுபடுகின்றது என்று ஒரு அரசியல் கோமாளியை வைத்து அவ்வப்போது பிரச்சாரம் வேறு செய்கின்றார்கள்.....முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்ப்பது மிகவும் ஆச்சரியமாய் இருக்கின்றது....

சரி மீனவர்களுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாம், அதற்க்கு காங்கிரஸ் ஏற்பாடுகள் செய்யுமாம்....அப்புறம் நீங்க எதுக்கு அந்த நாற்காலியிலே உக்காரணும், இதுக்கு ஒரு கட்சி, அதுக்கு ஒரு தலைவரு வேற? 

தேவயானிக்கு ஒரு நியாயம் நமது இந்திய மீனவர்களுக்கு ஒரு நியாயமா? என்று கேட்டால் இன்று வரை அதற்க்கு பதிலில்லை.....ஆனால் அடுத்த ஆட்சியில் நாங்கள்தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று வேறு நம்பிக் கொண்டிருக்கின்றது...ஆனால் கடைசி வரையிலும் தமிழர்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைத்த பாடில்லை....காங்கிரசின் கடைசி தேர்தல் இது என்று மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்...

இந்த ஆட்சி செய்த சாதனை என்ன? ஊழல், கேவலமான ஊழல், மிக கேவலமான ஊழல், கடுமையான விலையேற்றம், பெட்ரோல் தட்டுப்பாடு, காஸ் சிலிண்டர் விலையேற்றம், ஈழத் தமிழர்களின் உயிர்கள், தமிழக மீனவர்கள் பலிகடா, தமிழர்கள் மீது மட்டும் தனித் தாக்குதல், மாநிலங்களுக்கு இடையினில் சண்டையை உருவாக்கியது, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, தேவையற்ற வங்கிக் கடன் ரத்து, பாதுகாப்பற்ற டெல்லி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன அவர்களது சாதனைகள்....

பிரயோசனமற்ற ஆதார் அட்டை திணிப்பு என்று மேலும் சில கொடுமைகளும் அரங்கெரியதுதான் மிச்சம்....மோசமான பண வீக்கம், தங்கம் விலை, எரிபொருள் விலையேற்றம் இவைதான் முத்தாய்ப்பான சாதனைகள்..

அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்க கிளம்பிய இந்தியா இலங்கைக்கு கோப்பை கொடுக்கின்றது....